மருமகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய மாமியார்.!

295 0

லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகரகந்த தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மாமியார் மருமகள் மோதலின்போது மருமகள் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகரகந்த பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் மாமியாரினால் மருமகள் கூரிய ஆயுதத்தினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாமியாரை விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக லிந்துல பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment