இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

222 0

சட்டவிரோதமாக நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு மேற்கு கடற்பரப்பில் வடக்கு கடற்படை பிரிவு படையினரால் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுடன் சேர்த்து அவர்கள் வந்திருந்த படகு மற்றும் அதில் இருந்த உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அந்த மீனவர்கள் யாழ் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.

Leave a comment