திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.