கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மீள ஒப்படைப்பு

258 0

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் நேற்று இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பழுதுபார்க்கப்பட்ட பின் காங்கேசன் துறைக்கு வடக்கே சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும் செப்டம்பர் 30 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை சுமார் 12 சட்டவிரோத மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டு மீளக்கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை கப்பல்களானன “பிரதாப” மற்றும் “எடிதர” வின் உதவியுடன் குறித்த படகுகள் வடக்கு சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவல்படையின் “அமேயா” மற்றும் “அபீக்” கப்பல்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காகவே இப்படகுகள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment