திருப்பதி கோவிலில் சிறிசேனா தரிசனம்

396 0

201608211030324872_Tirupathi-temple-darshan-of-Sri-Lankan-President-sirisena_SECVPFதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் நேற்று பெங்களூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர், திருப்பதி வழியாக இரவு 8.30 மணிக்கு திருமலை வந்தார்.
ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி, திருப்பதி சுகுணா எம்.எல்.ஏ. மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் வரவேற்றனர். திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் குடும்பத்தினருடன் தங்கினார்.

இதைத்தொடர்ந்து இலங்கை அதிபர் சிறிசேனா இன்று அதிகாலை 2.15 மணிக்கு விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு கோவிலுக்கு வந்தார். கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து திருமலையில் இருந்து காரில் புறப்பட்டு பெங்களூருக்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் இலங்கை திரும்புகிறார். இலங்கை அதிபரின் வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பாதுகாப்பு பலத்தப்பட்டு இருந்தது.