கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 8 உறுப்பினர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கம்

349 0

SLFP_CIமகிந்த ஆதரவு கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் 8 உறுப்பினர்களை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் மைத்திரிபால சிறிசேன.

சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, சிறீலங்கா அதிபராக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக போராட்டங்களை நடாத்திவரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த 8பேரது அமைப்பாளர் பதவிகளே பறிக்கப்பட்டன.

முன்னாள் அமைச்சர்களாக றோகித அபேகுணவர்த்தன, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க, மகிந்த யாப்பா அபேவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, ஜெகத் பாலசூரிய, உதித் லொக்கு பண்டார, காமினி லொக்குகே ஆகியோரே மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 15 தேர்தல் தொகுதிகளிலும் 24 மாவட்டங்களுக்கு சிறீலங்கா சுதந்திரக்கட்சி புதிய அமைப்பாளர்களை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் மகிந்த ஆதரவு அணியினரை இல்லாதொழிக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.