தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் அருந்தவபாலனிற்கு எம்.பி. பதவி

366 0

svdvநாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட  முன்னாள் பாடசாலை அதிபரான அருந்தவபாலனிற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு தேசியப் பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசாவும் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் (புதன்கிழமை) முன்னாள் அதிபரான அருந்தவபாலனின் மணிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அருந்தவபாலன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருப்பு வாக்கில் நடைபெற்ற மோசடிமூலம் சரவணபவன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் தமிழரசுக்கட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.