மறுசீரமைப்பு செயலணி இடைக்கால அறிக்கை

354 0

dfdfdffமறுசீரமைப்பு பொறிமுறை தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி தமது இடைக்கால அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

11 பேர் கொண்ட இந்த குழு மனோரி முத்தெடுவேகமவின் தலைமையில் இயங்குகிறது.

இந்த குழு கடந்த ஜுலை மாதம் முதல் இந்த மாத ஆரம்பம் வரையில் மறுசீரமைப்பு பொறிமுறை குறித்த கருத்துப் பதிவுகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி தமது இடைக்கால அறிக்கையில், காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.