வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் மேலும் நிதியுதவி 

255 0

வடக்கில் நிலக்கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 190 மில்லியன் ரூபாய்களை வழங்கவுள்ளது.

அங்கு நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுடன் தொடர்புகொண்டுள்ள அமைப்புகளின் ஊடாக இந்த நிதி பகிரப்படவுள்ளது.

இதற்கான உடன்படிக்கை ஜப்பானிய தூதுவருக்கும், குறித்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் கடந்த செவ்வாய்கிழமை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு சுமார் 31.3 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment