இலங்கை ஜனாதிபதி ஐ.நா பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் 

259 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

72வது ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையில் நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது.

இதற்கான இலங்கைத் தூதுக்குழு நாளையதினம் அமெரிக்கா நோக்கி பயணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றவுள்ள 3வது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment