படை வீரர்களுக்கு வீடுகள் கையளிப்பு!

385 0

house (1)யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படை வீரர்களுக்குமாக நிர்மாணிக்க ப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவினால் நேற்று படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டன. வீடுகளை கையளிக்கும் அடை யாள நிகழ்வாக ஜனாதிபதி, ஜனா திபதி அலுவலகத்தில் வைத்து ஜனா திபதி வீட்டு உரிமையாளர்களிடம் வீடுகளின் திறப்புகளை கையளித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனை க்கு இணங்க படைவீரர்களுக்காக சகல வசதிகளும் கொண்ட வீடுகளை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 35 வீடுகள் படை வீரர்களிடம் கையளிக்கப்பட்டது டன், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடு களின் திறப்புகளை இவ்வாறு நேற்று ஜனாதிபதி; படைவீரர்களிட மும் உயிர் நீத்த படைவீரர்களின் உற வினர்களிடமும் கையளித்தார்.

வீட்டு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகள் என்பன கருத் திற்கொள்ளப்பட்டு நிர்மாணிக் கப்பட்ட இவ்வீடுகளுக்கான உடல் உழைப்பு, குறித்த வீட்டு உரிமை யாளரான படைவீரர் உள்ளடங் கும் படையணியினரினால் மேற் கொள்ளப்பட்டது.

இந்த வீடுகளை நிர்மாணிப் பதற்கான ஒட்டுமொத்த செலவு தற் போது சேவையில் உள்ள படை வீரர்களி னால் ரணவிரு வீடமைப்பு நிதியத் திற்கு வழங்கப்பட்ட நிதியில்இருந்தும் படையணியின் நிதியத்திலி ருந்தும் பெற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.