கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் விகாரை கட்டக்கூடாது

418 0

download-1 (1)கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் பௌத்த விகாரையின் கட்டடப்பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

குறித்த அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை கனாகம்பிகை அம்மன் ஆலய வளாகத்தினுள் கட்டப்படும் புத்தர் சிலை மற்றும் விகாரையின் கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி , பிரதமர் மற்றும் புத்த சாசன அமைச்சர் ஆகியோரை வடமாகாண சபை கோருவதாக கோரி பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார்.அதனை ஆளும் கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் வழி மொழிந்தார்.