உறவினர்களின் கோடரித் தாக்குதலில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

290 0

வவுனியாவில் உறவினர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஓமந்தை கிழவிகுளம் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் குடும்பத் தகராறு கைகலப்பாக மாறியதால் உறவினர்கள் சேர்ந்து கோடரியால் தலையில் வெட்டியதில் 30 வயதுடைய பாலையா சுதாகரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா கிழவிகுளம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் மூவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய  மேலும் ஒருவரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment