தாம் ஜனாதிபதியாக பதவியேற்காதிருந்தால் என்னவாகியிருக்கும் – மைத்திரி கேள்வி

248 0
தாம் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி ஏற்காதிருந்தால், நாடு தற்போது எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
இன்று நிலவும் தன்மைகள் மற்றும் நிலைமைகள் தாம் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாதிருந்தால் எவ்வாறு அமைந்திருக்கும்?
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சி நடத்துவதாக சிலர் குற்றம் சுமத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, விநோதங்களை நிகழ்த்துவதற்காக தாம் ஆட்சியமைக்க வில்லை என சுட்டிக்காட்டினார்.

Leave a comment