தம்மை விரும்பி அழைக்கவில்லை – மகிந்த

269 0
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழாவுக்கு தம்மை கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பு விருப்பத்திற்கு அமைய விடுக்கப்பட வில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொரவக்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66வது நிறைவாண்டு விழா நேற்று  நடைப்பெற்றது.
அதில் தம்மை கலந்து கொள்ளுமாறு 31 ஆம் திகதி இரவு அழைப்ப விடுக்கப்பட்டது.
அந்த அழைப்பு தம்மை முதலாம் திகதியே வந்தடைந்தது.
சிலருக்கு எந்தவிதமான அழைப்பும் விடுக்கப்பட வில்லை.
எவ்வாறு அதில் கலந்து கொள்வது என தெரிவித்த மகிந்த ராபக்ஷ, தம்மை விரும்பி எவரும் அழைக்க வில்லை எனவும் மகிந்த குறிப்பிட்டார்.

Leave a comment