அமைச்சர்கள் சிலர் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்து கொள்வர் – விமல் வீரவன்ச

239 0
எதிர்வரும் சில வாரங்களுக்குள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
இதற்கமைய 10 அமைச்சர்கள் வரையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியில் இணையதற்கு தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்பிப்பது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியாக இருப்பினும் நிறைவு செய்வது ஐக்கிய தேசிய கட்சியாகவே அமைகிறது எனவும் குறிப்பிட்டார்.

Leave a comment