இலங்கைக்கு நிதி வழங்கவுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது

266 0

ஜீகா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தமது நிதியினை தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஐவோ ஹொரி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 2வது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வந்திருந்த வேளையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் குறித்த மாநாட்டில் கலந்த கொள்வதற்காக இலங்கை வந்திருந்தார்.

இதன்போது அவர் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது ஜப்பானால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளுக்கு ஜனாதிபதி தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a comment