இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்

282 0

கெகிராவ மற்றும் கல்கிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்கிரியாவ – உல்பொதகம பகுதியில் உந்துருளி மற்றும் கெப்ரக வாகனம் ஒன்று மோதிக்கொண்டதில் 3 பேர் காயமடைந்தனர்.

இதன்போது பெண்ணொருவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளே இவ்வாறு காயமடைந்ததாக காவற்துறையின் தெரிவித்தனர்.

இதனிடையே, கெகிராவ பகுதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment