தாயும் மகளும் பேருந்தின் முன் பாய்ந்து தற்கொலை

459 0

suicide_14மஹியங்கனை – லொக்கல்ஒய 25ஆம் கட்டை பகுதியில் தாய் மற்றும் மகள் பேரூந்து முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவத்தில் மகள் ஸ்தலத்திலே பலியானதுடன் தாய் படுகாயமடைந்த நிலையில், பதுளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.
18 வயதான மகள் மற்றும் 53 வயதான தாய் ஆகியோரே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மகள் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மஹியங்கனை குருவிதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த இவர்கள், நேற்று இரவு தனியார் பேருந்து ஒன்றின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் சம்வம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்