அமெரிக்கத் தூதுவர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையில் முக்கிய சந்திப்பு

390 0

usa-atul-story_647_081315101827சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யவுள்ள அதுல் கெசாப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

அத்துடன் ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பிரிவானது ஒபரேஷன் பசுபிக் ஏஞ்சல் எனும் சமூக உதவி வேலை திட்டத்தினை அமெரிக்க தூதுவர் ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது பொறுப்புக் கூறல் செயற்பாடு மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள், அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.