நாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன்

351 0

CHANDRIKA_jpg_2361767fநாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன் என சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மீதியாக இருந்த கால்பகுதி யுத்தத்தையே மகிந்த ராஜபக்ஷ வெற்றிகொண்டார் எனவும், தன்னால் கொள்வனவு செய்யப்பட்ட போர்த்தளபாடங்களைக் கொண்டே யுத்தத்தை இலகுவாக முறியடிக்கமுடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 6 தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ததாகவும், குறித்த 6 விமானங்களும் அழிவடைந்து விட்டதாகவும், அவை அனைத்தும் அதிகம் பணம் கொடுத்து பெறப்பட்டதென சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.