பொய்யான அரசாங்கத்திற்குப் பின்னால் எம்மவர் செல்வது வேதனைக்குரியதே!

364 0

24688d670a740a078f4290c895cad0a8வண்டிலுக்கு முன்னால் கட்டவேண்டிய மாட்டினை வண்டிலுக்குப் பின்னால் கட்டி முதலில் நல்லிணக்கம் தான் பின்னரே இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பதுபோல் இந்த அரசாங்கம் தனக்குத்தானே நல்லாட்சி என பெயர் சூட்டியுள்ளது.

இந்த அரசாங்கத்திற்குப் பின்னால் நம்மவர்களில் சிலர் இழுபட்டுச் செல்வது வேதனைக்குரியதே என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனப் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் சிறீலங்கா இராணுவத்தின் கிபிர் விமானத்தின் குண்டுவீச்சுத் தாக்குதலில் 61 மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட நினைவு நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.