அனந்தி சசிதரன் -வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது

353 0

sivakran69ee (1)தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த இருவரதும் பதவிகள் பறிக்கப்படுவதுடன் அவர்கள் இருவரையும் மேலும் 3 ஆண்டுகள் சாதாரண உறுப்புரிமையில் வைத்திருப்பதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.