சட்டரீதியான நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளேன் – மு.க.ஸ்டாலின்

212 0

தமிழக அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்டரீதியான நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளள.

முதலமைச்சர் பழனிசாமி, மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாக இருந்த போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டது ஏன் என்றும் ஸடாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் அரசியலில் ஈடுபடுகிறார்.

தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னாலும் மத்திய அரசு உள்ளது என முதலில் இருந்து தாம் கூறிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாளைய தினம் முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது.

ஜனாதிபதியை சந்தித்த பின்னரும் தமிழக அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்டப்படியான நடவடிக்கையை தொடங்கவுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a comment