பரீட்சையில் மோசடி – பரீட்சார்த்தி கைது

271 0

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் பரீட்சார்த்தி ஒருவருக்காக மோசடியான முறையில் தோற்றிய ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கணக்கியல் பரீட்சையின் இரண்டாம் பகுதிக்கு அம்பாறை – உகன பரீட்சை மத்திய நிலையத்தில் அவர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இதன்போது, குறித்த விடயத்தை அறிந்துகொண்ட அந்த பரீட்சை நிலையத்தின் பொறுப்பாளர், காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, குறித்த பரீட்சைக்கு தோற்றியவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

அவர் உகன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a comment