தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது

430 0

201608150837439094_Presidential-Award-for-25-persons-TN-police-officers-on_SECVPFசுதந்திரதின விழாவையொட்டி சிறப்பாக பணியாற்றிய தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் பெயர் விவரம் வருமாறு:-

1.மாகாளி- நலத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. 2.அருணாச்சலம்-சென்னை மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் கமிஷனர். 3.சங்கர்-சென்னை எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு சூப்பிரண்டு. 4.ஜெயராம்-சென்னை செயலாக்க பிரிவு ஐ.ஜி. 5.அருண்-திருச்சி சரக டி.ஐ.ஜி. 6.சந்திரசேகர்- தமிழ்நாடு காகித ஆலை முதன்மை கண்காணிப்பு அதிகாரி(டி.ஐ.ஜி.) 7.ரவீந்திரன் – தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தளவாய். 8. ஜெயக்குமார்- சென்னை பரங்கிமலை, ஆயுதப்படை துணை கமிஷனர். 9. ரங்கராஜன்- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, திருவண்ணாமலை மாவட்டம். 10. ராஜராஜன்-கூடுதல் சூப்பிரண்டு, முதல்-அமைச்சர் பாதுகாப்பு தனிப்பிரிவு. 11.மாரிராஜன்-கூடுதல் சூப்பிரண்டு, மதுரை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு 12.மதி-துணை சூப்பிரண்டு, குற்ற ஆவணக்காப்பகம், திருச்சி.

13.பரந்தாமன்-உதவி கமிஷனர், சென்னை போரூர், எஸ்.ஆர்.எம்.சி. 14.விஜயராகவன்-துணை போலீஸ் சூப்பிரண்டு, சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு. 15.முத்துராமலிங்கம்-உதவி கமிஷனர், உளவுப்பிரிவு, மதுரை. 16.அருள்அமரன்-உதவி கமிஷனர், குற்றப்பிரிவு திருச்சி. 17.ராஜசேகர்-துணை சூப்பிரண்டு, போலீஸ் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை. 18.முத்துக்குமார்-துணை போலீஸ் சூப்பிரண்டு, சி.பி.சி.ஐ.டி. சென்னை. 19.ரவி-துணை சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்பு பிரிவு சென்னை. 20.பரமசிவன்-துணை சூப்பிரண்டு, சிறப்பு நுண்ணறிவு பிரிவு, கோவை. 21.முருகேசன்-இன்ஸ்பெக்டர், கொடுமுடி போலீஸ் நிலையம், ஈரோடு மாவட்டம். 22. கிருஷ்ணமூர்த்தி-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, விழுப்புரம். 23.பெரியசாமி-இன்ஸ்பெக்டர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பழனி. 24.பாஸ்கரன்-இன்ஸ்பெக்டர், தொலை தொடர்பு தொழில் நுட்ப பிரிவு, சென்னை. 25.கேசவரம்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு பிரிவு, ராமநாதபுரம்.

சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. லவர்சன் குருவிலா மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி குமரேசன் ஆகியோர் இந்த ஆண்டின் சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.