கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு திடலில் நாளை இடம்பெறவுள்ள இந்திய இலங்கை அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பாதுகாப்புக்காக ஆயிரம் காவற்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் விளையாட்டு திடலை சுற்றி சீ.சீ.டி.வி எனப்படும் மூடிய மின்சுற்று ஒளிப்பதிவு காணொளி பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அமைதியற்ற முறையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.