புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரல் உட்பட 6 பேர் கைது

229 0

ஹொரவபொத்தான – சேருநெவ தலபத்கம வனப்பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரல் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து மின்பிறப்பாக்கி, கல் உடைக்கும் இயந்திரம் மற்றும் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் ஹொரப்பொத்தான, கஹட்டகஸ்திகிலிய, கடவத்தை மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment