இளைஞர் ஒருவர் கொலை!

296 0

ஹபராதுவ – கொக்கல பாலத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் தடியால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இவர், தனது உறவினர் ஒருவருடன் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட முறுகல் நிலை அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர், 24 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கொலை செய்த நபரை கைது செய்வதற்காக காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a comment