சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்தவை நியமிக்குமாறு கோரி மனு; நீதிமன்றத்தின் உத்தரவு

283 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள மனு மீதான ஆட்சேபனை மனுவை செப்டெம்பர் 04ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்திலங்கை செயற்குழு உறுப்பினர்கள் இருவரான பொரலஸ்கமுவ நகர சபையின் முன்னாள் தலைவர் அருண பிரியஷாந்த மற்றும் அசங்க ஸ்ரீநாத் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தான் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment