முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ சோதனைகள்

376 0

182புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல் நலம் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ள வடமாகாண சுகாதார அமைச்சு திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, முன்னாள் போராளிகள் தமது உடன் நிலை குறித்து ஏதேனும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனில் மருத்துவமனைகளுக்கு சென்று சோதனை செய்துக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விடுதலை புலி போராளிகள் மர்மமான நோய்களுக்கு உள்ளாகின்றமை மற்றும் மர்மமான முறையில் இறக்கின்றமை தொடர்பில் அண்மையில் வடக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதில் முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச தரத்தினாலான மருத்துவ சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே தற்போது மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதனிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ சோதனை மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என குறிப்பிட்டார்.