பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஏ0ற்பாடு – தாயார் அற்புதம்மாள் 

214 0
பரோலில் வந்த பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பேரறிவாளன், தனது தந்தை ஞானசேகரன் என்கிற குயில் தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்த நிலையில், பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
இதை தொடர்ந்து பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் அவரது தாயார் கருத்து தெரிவிக்கையில், 20 வயதாக இருக்கும் போது ஜெயிலுக்கு சென்ற பேரறிவாளன், 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகு வெளியே வந்துள்ளார்.
தற்போது அவருக்கு 46 வயதாகிறது. பரோலில் மகன் விடுவிக்கப்பட்டுள்ளது தற்காலிக மகிழ்ச்சி தான்.
நிரந்தரமாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
மகன் பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறேன்.
திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. பெண் பார்த்து வருகிறோம். சொந்தத்தில் பெண் இல்லை.
வெளியில் பெண் தேடுகிறோம். வரன் அமைந்து விட்டால், பரோல் முடியும் 30 நாட்களுக்குள், பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment