சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? – கலைச்செல்வன்

226 0
இரட்டை இலை சின்னத்தை முடக்கிய பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக்கியது ஏன்? என முதல்வர் பழனிசாமிக்கு டி.டி.வி தினகரன் அணியில் இணைந்துள்ள கலைச்செல்வன் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி உள்ளார்.
விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், சென்னை அடையாறில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
டிடிவி தினகரனை சந்தித்த பின் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் செய்தியார்களிடம் கருத்து தெரிவித்தார்.
122 எம்.எல்.ஏக்களில் ஒருவரை துணை முதலமைச்சராக்காமல், சின்னத்தை முடக்க காரணமான பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சராக்கியது ஏன்? பன்னீர் செல்வத்தை துணை முதல்வராக்க வேண்டிய கட்டாயம் என்ன? தன்னை போன்று மனக்குமுறலுடன் பல எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment