காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

374 0

1471184080_6927940_hirunews_sdfdsயாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் காணமல் போயிருந்த பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காரைநகர் திக்கரையை சேர்ந்த சன்முகராஜ துவாரகா எனும் 16 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நேற்று இரவு, சுமார் எட்டு மணியளவில் வீட்டில் இருந்து குறித்த சிறுமி காணமல் போயிருந்தார்.
இதனையடுத்து அவரது பெற்றோர் இது தொடர்பாக ஊர்காவல்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் பெற்றோர் இணைந்து ஈடுபட்டனர்.
இந்நிலையிலேயே, குறித்த மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 300மீற்றர் துரத்தில் உள்ள கிணற்றுள் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.