தென்கொரிய முதலீட்டாளர்களுக்கு மஹிந்த அழைப்பு

418 0

Aani_news_1435743291920இலங்கையில் முதலீடு செய்யுமாறு தாம் தென்கொரிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஸ இதனை தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மிரிஹானை இல்லத்தின் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
அதில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.