ஆசிய தேர்தல் பங்காளிகளின் நான்காவது மாநாடு இலங்கையில்

384 0

ஆசிய தேர்தல் பங்காளிகளின் நான்காவது மாநாட்டினை 2018ம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவதற்கும்  அதற்காக சம தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழு மற்றும் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலயமைப்புக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டின் மூலம் இலங்கை தேர்தல் செயன்முறை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும் பிற உறுப்பு நாடுகளின் அநுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய வலய நாடுகளில் தேர்தல் தொடர்பில் பொதுவாக காணப்படுகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு காண்பது மற்றும் அந்நாடுகளில் சட்டவாட்சியினை உறுதி செய்து கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதற்காக அரச சார்பற்ற அமைப்பாகும். அவ்வலயமைப்பினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற ஆசிய தேர்தல் பங்காளிகளின் நான்காவது மாநாட்டினை 2018ம் ஆண்டில் இலங்கை நடாத்துவதற்காக சம தலைமைத்துவத்தை தாங்குவதற்கு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவும் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment