பெண்ணொருவர் மற்றும் ஐந்து வயது பிள்ளை மீதும் அசிட் வீச்சு

208 0

களுத்துறை – கட்டுகுறுந்த வடக்கு பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,
அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

மேலும் இந்த தாக்குதலின் போது அவரின் ஐந்து வயது பிள்ளையும் பாரிய தீகாயங்களுக்கு உள்ளாகி நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

36 வயதான இந்த பெண்ணின் முகம் மற்றும் மார்பு பகுதியில் தீகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பெண், களுத்துறை –  கட்டுகுறுந்த வடக்கு சனச சங்கத்தின் தலைவராக செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவருக்கு பாரிய தீகாயங்கள் ஏற்பட்டுள்ளதால் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை என காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

கடன் விவகாரம் தொடர்பில் இந்த அசிட் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், பெண்ணொருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டிக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளாக காவற்துறை முன்னெடுத்துள்ளது.

Leave a comment