கொஸ்கொடை – வதுரவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் தடி ஒன்றினால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் கள்ளக்காதலில் ஈடுபட்ட நபர் உட்பட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பலபிடிய நீதாவன் இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வதுரவெல – கொஸ்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பெண்ணின் தந்தை உட்பட கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பருமே இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் 30 ஆம் திகதி காலை பொழுது கொஸ்கொடை காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் கால், கை பகுதிகளை கட்டி வைத்து, கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
வீட்டில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டின் காரணமாக இரு வீடுகளில் வசித்து வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான நிலைமையிலே குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.