விமானத்தில் இருந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை – இந்தயா

325 0

an32_2949130fகாணாமல்போன இந்திய வான் படைக்கு சொத்தமான விமானத்தில் இருந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என இந்திய மத்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையிலிருந்து அந்தமான் தீவுக்கு 29 பேருடன் சென்ற ஏ.என்.32 ரக விமானம் காணாமல்போனது.

இந்த விமானத்தை தேடும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன.

இருப்பினும் விமானத்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், குறித்த விமானத்தில் பயணித்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என இந்திய மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் சுபாஷ் ராம்ராவ் பாம்ப்ரே தெரிவித்துள்ளார்.