கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – சீனாவுடன் முத்தரப்பு உடன்பாடு கைச்சாத்து

339 0

Colombo_Port_2016கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான முத்தரப்பு உடன்படிக்கையொன்று நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) கைச்சாத்தாகியுள்ளது.

சீனாவின் 1.5பில்லியன் நிதிச் செலவில் ஆரம்பித்த கொழும்பு துறைமுக நகரத் திட்டப் பணியானது கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க மைத்திரி அரசு மீண்டும் அனுமதியளித்ததையடுத்து முத்தரப்பு உடன்பாடொன்று கைச்சாத்தாகியுள்ளது.

கொழும்பு அனைத்துலக நிதி நகரம் என்ற பெயரில் இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ள உடன்பாட்டில், பெருநகர, மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

முன்னைய உடன்பாட்டில் கடலிலிருந்து மீட்கப்படும் நிலத்தின் பரப்பளவு 233 கெக்டெயராக இருந்தது. எனினும் புதிய உடன்பாட்டுக்கு அமைய, கொழும்பு அனைத்துலக நிதி நகரத்தை அமைப்பதற்காக 269 ஹெக்ரெயர் நிலம் புதிதாக உருவாக்கப்படவுள்ளது.

பொதுப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள நிலத்தில் அளவு, 63 ஹெக்ரெயர் இருந்து 91 ஹெக்ரெயராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 62 ஹெக்டயர் நிலத்தில் அனைத்துலக நிதி நிலையம் உள்ளிட்ட அரச முயற்சியிலான திட்டங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் புதிதாக உருவாக்கப்படும் நிலப்பகுதியில் 153 ஹெக்டயர் பரப்பளவு சிறிலங்கா அரசாங்கத்திடமே இருக்கும்.

இத்திட்டத்தின்மூலம் 13 ஹெக்டெயர் பரப்பில் மிகப்பெரிய கடற்கரை உருவாக்கப்படவுள்ளது. இது காலி முகத்திடலை விட 8 மடங்கு பெரியதாக அமையும். குறித்த நிரப்பரப்பானது சீன நிறுவனத்துக்கு 99ஆண்டுகள் 1ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் இருந்து 3 தொடக்கம் 4 கி.மீ தொலைவிலேயே கடலில் இருந்து மண்ணை அகழ்வு செய்ய சீன நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அதுவும் கடலின் ஆழம் 15 மீற்றருக்கு அதிகமாக உள்ள பகுதியில், 3 மீற்றர் வரையே மண் அகழ்வுக்கு அனுமதிக்கப்படும்.