மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மாலியில் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் அமைதிப்படை முகாம்கள் உள்ளன.
ஆப்ரிக்க நாடுகளில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை அழிக்கும் பணியில் இந்த படை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அந்த நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள நகரான டிம்பக்துவில் இருக்கும் அமைதிப்படை தலைமையகத்தில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.
இந்த தாக்குதலில் 5 மாலி நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அமைதிப்படையை சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த தகவலை உறுதி செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இது தீவிரவாத தாக்குதலே எனவும் குறிப்பிட்டுள்ளது.