போர்க்குற்ற விசாரணை தேவையில்லையாம்

626 0

kesavan-sayanthanவடக்கு மாகாண சபையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் போர்க்குற்ற விசாரணை நடாத்தப்படவேண்டுமென கலாநிதி சர்வேஸ்வரன் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக கலாநிதி சர்வேஸ்வரன் உரையாற்றிக்கொண்டிருந்த நேரம் அவரை இடைமறித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தன்,

வடக்கு மாகாண சபை உறுப்பிளர்கள் மற்றும் முதலமைச்சர் என அனைவரும் தொடர்ந்து போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி வருகின்றீர்கள். அதேபோல் தான் கலாநிதி சர்வேஸ்வரனும் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

தொடர்ந்து போர்க்குற்ற விசாரணை கோரிக்கொண்டிருந்தால் பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டி வரும். அதைவிட்டுவிட்டு அரசியல் தீர்வு குறித்துக் கவனம் செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.