வங்கி கொள்ளை தொடர்பில் விசாரணை செய்ய 3 பொலிஸ் குழுக்கள்

375 0

நேற்று பகல் தெஹிவளை-அத்திட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பலரிடம் விசாரணைகள் செய்யப்பட்டுள்ளதுடன்,சம்பவத்தின் சந்தேகநபர்கள் தொடர்பில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்;டுள்ளனர்.

முகத்தை முற்றாக் மறைத்த தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று பகல் அத்திட்டியவில் அமைந்துள்ள தனியார் வங்கிக்குள் நுழைந்து வங்கி காவலர்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு 34 இலட்சம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த காவலர்கள் இருவரில் ஒருவர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment