ரவி கருணாநாயக்கவை முன்மாதிரியாக எடுக்கவேண்டாம்

280 0

அரச தரப்பில் ரவி கருணாநாயக்கவை முன்மாதிரியாக எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,நாம் நாட்டு மக்களிடமும்,குழந்தைகளிடமும் தெரிவிக்கின்றோம் ரவியை முன்மாதிரியாக எடுக்க வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரவி கருணாநாயக்க பதவி விலகியமையானது அவர் செய்த மோசடிகளுக்கு தன்டணை இல்லை என்றும்,அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யார் தவறு செய்தாலும்,குறித்த சந்தர்ப்பத்தில் அவர் அணிந்துள்ள ஆடையை கழற்றி வேறு ஆடையை அணிவதால் மாத்திரம்  அவர் செய்த தவறுகள் சரியாகி விடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாகவும்,ஏனெனில் ரவியின் பதவி விலகலையடுத்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய அவருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதற்கு சான்றுகள் உள்ளதாகவும் அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment