ஊடக சுதந்திரம் உள்ளதாலேயே அனைவருக்கும் திருட்டுபட்டம் – பிரதமர்

222 0

நாட்டில் ஊடக சுதந்திரம் உள்ளதாலேயே அனைவரையும் திருடர்கள் என ஊடகங்கள் தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

லசந்தவை தேடிச் சென்றவர்கள் அவரை கொன்றதுடன்,எக்னலி கொடவை தூக்கிச் சென்றதாகவும் இதுவே கடந்த கால ஊடகத்தின் நிலை என்றும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சுப் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க விலகியதையடுத்து நாடாளுமன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி என்றால் என்னவென்பது ரவியின் சம்பவத்திலிருந்தே வெளிக்காட்டப்பட்டுள்ளதாகவும்,இதனால் தான் பெருமையடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment