ரவி இன்னும் குற்றவாளியாக நிருபிக்கப்படவில்லை -சம்பந்தன்

232 0

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்னும் குற்றவாளியாக நிருபிக்கப்படவில்லை என்ற போதும் அவர் அமைச்சுப் பதவியை துறப்பதற்கு எடுத்த முடிவிற்கு தனது கௌவரவத்தை செலுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ரவி கருணாயக்கவை நீதிமன்றம் இன்னும் குற்றவாளியாக அறிவிக்கப்படவி;ல்லை என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து நாடாளுமன்றில் உரையாற்றிய பின்பு சம்பந்தன் உரையாற்றினார்.

எனினும் ரவி கருணாநாயக்க ஏனைய உறுப்பினர்களுக்கு முன்னுதாரணத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் உரையைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன்இஎதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கூட்டுஎதிரணி மரண அச்சுறுத்தல் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பிரதி சபாநாயகரிடம் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment