வடக்கு,கிழக்கு வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்

14809 0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் அரச வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த மாகாணங்களில் பணிபுரியும் வைத்தியர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக இடமாற்றம் வழங்கப்படவில்லை என்றும், இது தொடர்பில் சுகாதார அமைச்சு எவ்வித தீர்வினையும் பெற்றுக்கொடுக்க முன்வராமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடந்த 8ஆம் திகதி பணிப்புறக்கணிப்பு ஒன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும்,எனினும் இன்று இதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர்
வாக்குறுதி வழங்கியதனால் தமது பணிப்புறக்கணிப்பை ஒத்திவைத்தாகவும் செயலாளர் ஹரித குறிப்பிட்டுள்ளார்.
எனவே இன்று தமக்கான தீர்வு கிடைக்காததால் தமது பணிப்புறக்கணிப்பை எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

Leave a comment