சட்டவிரோத கடற் தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது

271 0
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத கடற் தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் விடுதலைத்தீவு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கடற் தொழிலாளர்கள் வசமிருந்த நான்கு சட்டவிரோத மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 12 கடற் தொழிலாளர்களும் பொருட்களுடன் விடுதலைத்தீவு கடற்தொழில் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a comment