அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

9176 32

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா கீழ் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில்இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா கீழ் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலக்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment