செம்மரம் கடத்திய 4 பேர் கைது

420 0

17733_arrested300திருப்பதி அருகே செம்மரம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பதி அருகே சேஷாசலம் மலைப் பகுதியில் உள்ள தேவரகொண்டா என்ற இடத்தில் செம்மர கடத்தலை தடுக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 4 பேர் செம்மர கட்டைகளை சுமந்து சென்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது கடத்தல்காரர்கள் செம்மரகட்டைகளை கீழே போட்டு விட்டு போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓட முயற்சித்தனர்.

போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த சுரேஷ், சந்திரபாபு, பிரபு, கார்த்திக் என்றுதெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் பீலேரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வர் கைது செய்தார். அவர்கள் கடத்திய செம்மர கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.